Sunday, August 10, 2008

அதிரை த.த.ஜ வும் கிறிஸ்தவ பாதிரியும்!

"ததஜவின் இரண்டாவது ஹீரோ பாக்கரைப் பற்றி மட்டும் கண்டுக்கொள்ளாதது ஏன்? அவர்மீது எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரியாதா உங்களுக்கு? அவரை ஒரு பெண்னுடன் தவறாக சென்றதாக வந்த குற்றச்சாட்டிற்காக சில நாட்கள் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு (உள்ளுக்குள் என்ன நடந்ததோ) சில நாட்கள் கழித்து மீண்டும் பதவியில் சேர்க்கப்பட்டார். அது ஏன்?" என்று அதிரை எக்ஸ்ப்ரஸில் அபு பக்கர் என்பார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அதிரை த.த.ஜ வை சேர்ந்தவர்கள், "பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்." என விளக்கம் கொடுத்துள்ளார்கள்...! அதாவது, எல்லா இயக்கத்திலும் தீயவர்கள் உள்ளார்கள் எனவே, இது என்ன இதை விட இமாலய குற்றம் செய்து அதற்கு, மார்கத்தை காரணம் காட்டாமல் இருத்தால் ஏற்றுக்கொள்வோம்...!என்கிற தொனியில் கூறியிருக்கிறார்கள். பத்து ரூபாயை கிறிஸ்தவ பாதிரியிடம் கொடுத்து "மண்ணித்து விடும்" என்றதும் "உன் மண்ணிப்பை ஆண்டவர் ஏற்றுக்கொன்டார்" என்பார் கிராமத்து பாதிரி! அதுப்போல் அல்லவா இருக்கிறது.?

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

ததஜ ஹீரோ பீ.ஜெயும் உளவுத்துறையும்!

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பள்ளிவாசளைக் கைப்பற்றுவதற்காக தொழுகையைத் தடுக்கும் அநியாயத்திற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்.,உங்கள் ததஜ ஹீரோ பீஜே தனது எதிரி என்பதால் அவர்களை அரசுக்கு காட்டிக்கொடுத்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்வதுடன்;, மக்கள் தனது எதிரிகளை இழிவாக கருதவேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி பேசும் பொய்களைப் பாருங்கள்.,//அதிரை ட்ரூத் மற்றும் ததஜ சம்பந்தமாக வினவியுள்ள கேள்விகளுக்கு பதில்கள்,1. ததஜ வை சார்ந்து அதிரை ட்ருத் நடத்தப்படவில்லை. ததஜ வில் உள்ளவர்களும் அதிரை ட்ருத் வலை தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.//அதிரை ட்ருத் முழுக்க முழுக்க அதிரை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகின்றது என்பது தான் உன்மை. வேண்டுமானால் பெயருக்காக ஒரு சிலரை சேர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள்கூட அந்த தளத்தில் தவ்ஹீத் ஜமாஅதின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்து எழுத முடியாது என்பதுடன் அந்த ஜமாத்திற்கு ஆதரவாக மட்டுமே உங்கள் தளத்தில் செய்தி வெளியிடப்படும் என்பதே உன்மை. அதற்கு ஒரு சாண்று நீங்கள் இந்த கமென்டிலேயே தவ்ஹீத் ஜமாத்தைக் காப்பாற்றுவது போண்று தான் எழுதியுள்ளது. குறிப்பாக பாக்கர் செய்த செயலுக்கு மார்க்கம் காரணமாக சொல்லப்படவில்லை என்று சொல்லியுள்ளதும், அவர் போண்றோர் பல இயக்கத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று எழுதியுள்ளதும், குர்ஆன் ஹதீசை போதிக்கக்கூடிய சகோதரர்கள் நடத்தும் பள்ளியில் ஜமாத் தொழுகை நடத்தப்பட்டபொழுது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தலைவர்களால் குறுக்கே உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு செய்ததை நியாயப்படுத்தி நீங்கள் எழுதியுள்ளதிலிருந்தே உங்கள் தளம் எந்த கொள்கைச்சார்ந்தது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. //2. நடுத்தெரு சிஷ்தியைப் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தும், நீங்கள் ததஜ வின் பாக்கரின் தவரைப் பற்றி ஏன் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்று வினவியுள்ளீர்கள். சிஷ்தி தான் செய்யும் செயலுக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டுகிறார், பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்.//பாக்கர் தவறு எல்லோருக்கும் தெரியும் என்றப்பிறகு உங்கள் தவ்ஹீத் ஜமாத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்காக விளக்கப்பட்ட சிறிது காலத்திலேயே (உலகத்திலேயே உன்மையான இஸ்லாத்தைப் பின்பற்றிக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட ஜமாத்திற்கு) பொதுச்செயலாளராக ஆக்கியது ஏன்? வெட்கமாக இல்லையா? இது போன்றவர்கள் பல இயக்கங்களிலும் இருக்கின்றார்கள் என்று சொல்வது தான் உங்கள் இஸ்லாமியப் பற்றா? மார்க்கத்தைப் போதிக்கக்கூடிய இயக்கங்களிலேயே இது போன்றவர்கள் இருக்கும் போது பொது மக்கள் கூடும் தர்காவில் நடக்கும் சில்மிஷ விளையாட்டை கண்டிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்று தர்கா ஆதரவாளர்கள் கேட்டுவிட மாட்டார்களா? ததஜ மத்ஹப்பை விட்டு வெளியே வாருங்கள் சகோதரர்களே! அதில் இருந்துக்கொண்டு யாரைப்பற்றியும் கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை என்பது தான் எனது கருத்து.//3. அடுத்தாக, அதிரை ட்ரூத், நமது ஊர் அதிரையில் உள்ள மார்க்கத்திற்கு மாற்றமான பிரச்சனைகளை அம்பலபடுத்தி, அதை சீர்திருத்துவது தான் அதன் நோக்கம்//உங்கள் தலைமையிடம் அசிங்கத்தை வைத்துக்கொண்டு மற்றவனைத் திருத்துவது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. அந்த கழிசடைகளை ஒதுக்கிவிட்டு மற்றவர்களைத் திருத்த முயலுங்கள்.//4. ததஜ ஏன் தனி பெருநாள் தொழுகை நடத்த ஆரம்பித்தது என்று கேட்டுள்ளீர்கள்? தவ்ஹீத் சகோதரர்களால் நடத்தப்படும் பெருநாள் தொழுகையில் ததஜ வின் பேச்சாளர்களுக்கு மட்டும் அனுமதி தர மறுத்தார்கள். ததஜ எங்கள் பேச்சாளர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, ஒரு பெருநாளிலாவது, எங்களின் பேச்சாளர்களையும் அனுமதியுங்கள் என்று கேட்டது, அதை அவர்கள் மறுத்தார்கள்.//இது மிகத் தவறான தகவல். உன்மையில் என்ன நடந்தது என்றால் பெருநாள் தொழுகையை ததஜ பெயரிலேயே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் அதிரை ததஜவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் துபையிலிருந்து வந்த ததஜவினரும் அடக்கம். (பெயர் வெளியிட விரும்பவில்லை. தேவைப்பட்டால் பெயர் வெளியிடப் படும்) அப்பொழுது (ஈத் தொழுகையை தொடர்ந்து நடத்தி வரும் தற்போது எந்த இயக்கத்தையும் சாராத) அதிரை ஈத் கமிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் உங்கள் தாயி அஷ்ரப்புதீன் ஃபிர்தவ்சியே தொழுகையும் நடத்தட்டும், பயானும் செய்யட்டும், ஆனால் ஈத் கமிட்டி என்றப் பெயரிலேயே ஒரே இடத்தில் நடத்துவோம் என்று சொன்னதற்கு, அதை ஏற்றுக்கொள்ளாத அதிரை ததஜவினர், எங்களுக்கு தனித்தன்மைத் தான் முக்கியம், நாங்கள் எங்கள் பெயரிலேயே தனியாகவே நடத்துவோம் என்று கூறிவிட்டனர். இது தான் நடந்தது. ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பேச்சாளரை அழைக்கவில்லை என்பதற்காகவெல்லாம் ஊர்கூடி தொழும் தொழுகையைப் பிரித்து குழப்பம் செய்வது தான் உங்கள மார்க்கமா? அந்த தொழுகை இது வரை நடத்தப்பட்டதில் எந்த பேச்சாளராவது நீங்கள் சொல்லக்கூடிய தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார்களா? என்ன கொள்கையோ உங்கள் தவ்ஹீத் கொள்கை, புரியவில்லை சகோதரா? //5. ததஜ ஒரு பள்ளியை அபகரிக்க பார்க்கிறது என்று குற்றம்சாட்டி, ஒரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு, மறுப்பாக ததஜ வும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது, ஆதாரத்துடன், அதையும் கொஞ்சம் பாருங்கள். உண்மை தெரியும். ஜாக் தவ்ஹீத் எதிராக சென்று கொண்டுருக்கிறது. மட்டுமல்லாமல், எல்லா தவ்ஹீத் சகோதரர்களாலும் சேர்ந்து கட்டப்பட்ட பள்ளியை ஜாக் தான் அபகரித்தது முதலில், அது தான் பிரச்சனைக்கு காரணம். ஒரு சாராரின் பேச்யை கேட்டுவிட்டு, அதை அப்படியே பரப்பாதீர்கள்.//எந்த அளவுக்கு உங்களுக்கு ஜமாத் வெறி முற்றிவிட்டது என்று பார்த்தீர்களா சகோதரா! முதலில் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துக்கொள்ளுங்கள். அந்த வீடியோவில் பீஜேயும் சைபுல்லாஹ் ஹாஜாவும் அந்தப் பள்ளி சம்பந்தமாக முரண்பட்டு பேசுவது மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. மட்டுமல்ல இவர்கள் அளித்துள்ள பதில் சீடியில் அந்த முரண்பாட்டிற்கு எந்த மறுப்பும் கொடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல அது ஜாக்கிற்கு சொந்தமானது என்று கோர்ட் தீர்ப்பு வந்தப்பிறகுதான் உங்கள் ஜமாத்தின் உயர்மட்ட தலைவர்களின் தலைமையில் அந்த தொழுகையைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விஷயத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்போம் என்று சொன்னவர்கள் முஸ்லீம்களின் ஒற்றுமை விஷயத்ல் அது போல் கோர்ட் தீர்ப்பை மதிக்க மறுப்பது ஏன்? முஸ்லீம்கள் தானே இழிச்சவாயர்கள் உங்கள் ஜமாத்தார்களுக்கு. அதனால் தான் அந்த அக்கிரமத்தை நடத்திக் காட்டினர். ஒரு வாதத்திற்காக அந்த பள்ளி விவகாரத்தில் ஜாக் மீது தவறு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக பள்ளிவாசல் சார்பாக ஜமாத் தொழுகை நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த தொழுகையை தடுத்துதான் உங்கள் வீரியத்தை காட்ட வேண்டுமா? இது தான் உங்கள் தவ்ஹீதோ! இதைத்தான் உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் கற்றுத்தரும் பாடமோ! உஙகள் ஜமாத்தினரை திருத்துவரை விட்டுவிடுவோம். தவ்ஹீத் ஜமாத்தினரின் தொழுகை தடுப்பு போராட்டத்திற்கு ஆதரித்து எழுதியதற்காக நீங்களே முதலில் தவ்பா செய்துக்கொள்ளுங்கள். நான் மற்றொரு லிங்க் கொடுத்திருந்தேன். பீஜே உளவுத்துரையிடம் சகோதர இயக்கத்தினரை காட்டிக்கொடுப்பதும், அவர்கள் தங்கள் எதிரிகள் என்றிருப்பதால் அவர்களைப் பற்றி பொய்யான செய்திகளை முரண்பாடாக தெரிவிப்பதும் குறித்து ஒரு வீடியோ ஆதாரமும் கொடுத்திருந்தேன். அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லை என்பதிலிருந்தே அவர் ஒரு மகா கொடிய பொய்யர் என்பதை உங்கள் உள் மனது ஒத்துக்கொண்டுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!ஆபூபக்கர், துபை

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

Monday, June 30, 2008

மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!


கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்ற‌இளைஞர் சமுதாயமே! - ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!

நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.

நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்காத‌ல் என்று கைகோர்த்து - இதும‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!

ம‌துவுக்குள் மாட்டிதின‌ந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!

ஆடையில் ஆர‌றை குறைப்புஅதில் ஓரிரை ம‌றைவுபாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு - இதும‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!

இளைஞ‌ர் கூட்ட‌மே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!

மரணத்தை நினைத்துப்பார்!

அன்புட‌ன்
எம்.எச்.ப‌ஸ்மிய்யா

அல்குர்ஆன் விரிவுரைக்கான‌ க‌ற்கை வ‌குப்பு மாண‌வி

கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம்


தமுமுக கிருஷ்ணகிரி நகரம் சார்பாக கடந்த 14.6.2008 அன்று கிருஷ்ணகிரி பழையபேட்டை பூரா மசூதி அருகில் 'சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இதில் தமுமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இக் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி செயலாளர் வழக்கறிஞர் அன்வர், வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி மற்றும் கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நன்றி :பதிப்பு தமுமுக இணைத்தளம்.

Sunday, June 29, 2008

அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம் - இன்றும் அதிர்ந்தது

டெல்லி: அந்தமானில் இன்று அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களாகஅடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 5 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று காலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. காலை 6.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ் .

Wednesday, June 25, 2008

அல்லாஹ் காப்பற்றுவானாக ஆமீன்...


தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!கொந்தளிக்கும் இந்தியா!!---சத்தியவேந்தன்

பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்!

பதிப்பு : தமுமுக


கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர் 500 பேர் கைது



கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை புறநோயாளிகளும், ஆயிரத்து 500 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாது ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக போக்கை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி முன்பு 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி தமுமுக அறிவித்திருந்தது. இவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை. போலீசார் அனுமதி கொடுக்கவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று த.மு.மு.க. அறிவித்தது.இதை தொடர்ந்து நேற்று (24-06-08) காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் பீரங்கி வண்டிகள், வஜ்ரா வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் வரை த.மு.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான த.மு.மு.க.வினர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள பஸ்நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பின்னர் 11.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ஏ.அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் இ.அகமது கபீர், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.காதர் உசேன், துணை செயலாளர் எஸ்.நூர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில செயலாளர் உமர் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே "திடீரென்று" ஒருவரை ஸ்டெச்சரில் படுக்க வைத்த நிலையில் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைசேர்ந்த 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் அவினாசி சாலையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய த.மு.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வசதி படைத்தவர்கள் வருவதில்லை. தினக்கூலிகளாகவேலை பார்ப்பவர்கள் தான் வருகிறார்கள். பஸ்கட்டணத்திற்கே கடன் வாங்கி வரும் வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது இறைவனுக்கு அளிக்கும் தொண்டாகும். கோவை அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தை செம்மை படுத்த வேண்டும். பெண்கள் வார்டு கழிவறைக்கு சென்றால் இல்லாத நோயெல்லாம் வந்து விடும் நிலையில் உள்ளது.பிணவறையில்பல நாட்களாக குளிர்சாதன பெட்டி இயங்க வில்லை. இதனால் பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எம்.ஆர்.ஐ.ஸ்கேன்வசதி இருந்தும் அதை இயக்க ஊழியர்கள் இல்லை.பிரசவ வார்டில் 50 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். நரம்பியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் படுக்கைகள் மோசமான நிலையில்உள்ளன. இவற்றை எல்லாம் சீர்படுத்தக்கோரிதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விரைவில் நல்ல முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு என்.கே.அஷ்ரப் கூறினார்.
பதிப்பு : தமுமுக.

ராஜஸ்தானில் பொதுச்செயலாளர்!



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 21.6.2008 அன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்து முஸ்லிம் பிரதி நிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து தமுமுகவின் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக கீட்டின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பதிப்பு : தமுமுக.

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா


அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.
ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.
அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.
ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.
அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்.
பதிப்பு தமுமுக .

Tuesday, June 24, 2008

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டி

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டிதிரு.ஹைதர் அலி அவர்கள்

கேள்வி : தமிழகத்தில் திறமையான ஏராளமான முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருக்கையில் அவர்களை பணியில் அமர்த்தாமல் நீங்கள் தலைமை வகிக் கின்ற வகஃபு வாரியத்திற்கு லட்சுமி நாராயணன் என்பவரை நியமித்து உள்ளீர்கள். இது எப்படி சரியாகும்? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம்களுக்காக தனி இட ஒதுக்கீடு முழு அளவில் பெறவேண் டும் என்று போராடி கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமனம் செய்தது சரிதானா?

பதில்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களில் ஏராளமான திறமையான வழக்கறிஞர்கள் இருக்கும் போது வக்பு வாரியத்தில் ஒரு இந்து சகோதரனை லட்சுமி நாராயணன் என் கிற வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளீர்கள் இது நியாயம் தானா? அதற்காக போராட்டம் நடத்த போவதாக கூட ஒரு பத்திரிக்கையின் மூலமாக கூட சொல்லி இருக்கிறார்கள்.நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஹதீஸ்களை ஆய்வு நடத்துகிற போது ஹதீஸ் கலை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பா ளர் பொய்யராக இருந்தால், அல்லது அவர் பலகீனமாக இருந்தால் அல்லது ஞாபகமறதி உடையவராக இருந்தால், புத்தி சுவதீனம் இல்லாதவராக இருந்தால் அந்த ஹதீஸ்களை நாம் விடவேண்டும். அதற்கு ஒரு ஸஹீஹ் என்ற அந்தஸ்தை தரமுடியாது என்பது ஹதீஸ்களை நாம் பகுத்து பார்க்க வேண்டிய விஷயம். அந்த அடிப்படையில் நீங்கள் இதை பார்க்க வேண்டும். எல்லா விஷயங்க ளுமே குர்ஆன், ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி.

ஒரு விஷயத்தை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிற ஒரு பொய்யன் சொல்கிற எல்லா குற்றச்சாட்டு களுக்கும் பதில் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொய்யன் என்று எப்படி சொல்கிறீர்கள் ஆதாரம் இருக் கிறதா? என்றால் இருக்கிறது.

நான் பதவி ஏற்ற உடனேயே... தமுமுகவால் நடத்தி கொண்டு இருந்த உணர்வு என்கிற பத்திரிக்கை திருடி செல்லப்பட்டு அதை அபகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதில் வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று எழுதினார்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று எழுதியபிறகு அவர்கள் இயக்கத்தில் இருக்கக்கூடிய ஜாகிர் உசேன் என்கிற சகோதரன் அவரிடத்தி லேயே (பி.ஜே) என்ன அண்ணன் 1 லட்சம் சம்பளம் என்று எழுதி இருக்கின்றீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துள்ளார்கள் என்று அவர் கூறிய உடன் அவர் என்ன செய்திருக்க வேண்டும். அப்படியா? என்று மறுப்பு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவரி(ஜாகிர் உசேன்)டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் மானியம் அது இது என்று எல்லா அலவன்ஸ் என்று அது ஒரு லட்சம் வரும் அப்படி என்னன்ன வருகிறது என்று நீங்களும் ஒரு பட்டியல் எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

வக்ஃபு வாரியத்தில் இருந்து வக்பு வாரியத் தலைவருக்கு சம்பளம் தரப் படுகிறதா? என்றால் இல்லை. அந்த புத்திசாலிகளுக்கு இது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தாலும் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்யை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு கொண்டு இருப் பவர்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை.வாகனத் திற்கு டீசல் தரப்ப டும், அதுவும் எப்படி தரப்படு கிறது? ஒரு நாளைக்கு 12 லிட்டர் டீசல், வீட்டு தொலைபேசிக்கு, எனது கைபேசிக்கு கட்டணம் இவைதான் தரப்படுகின்றன. இவைகள் தான் வாரியத் தலைவருக்கு தரப்படுகின்ற மானியங்கள், சலுகைகள்.சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.சி. தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒருவரை நியமனம் செய்தார்கள். அப்படி நியமனம் செய்தவுடன் உடனடியாக ஒரு கூக்குரல் பாருங்கள் இடஒதுக்கீடு என்று சொல்லி ''இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது. இப்ப இதில் கூட ஒருவர் கூட முஸ்லிம் இல்லை'' என்று கூச்சலிட்டார்கள். உடனடியாக செய்திவருகிறது, நாம் பத்திரிக்கையில் எழுதுகிறோம். முதலில் யாஸ்மீன் அஹமது இருந்தார். அவர் போன பிறகு காசி விஸ்வநாதனை தலைவராக கொண்டு அமைக்கும் போது ஜின்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நாம் பத்திரிக்கையில் எழுதிய பின்னர் அடுத்த வாரம் (களவாடிய) பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தப்பு மனிதனுக்கு வராமல் இருக்குமா தவறாக வந்து விட்டது. இதை பத்திரிக்கையில் பெரிதாக எழுதுகிறார்கள். என்று கூச்சலிட்டார்கள்.

நாம் ஏன் இதற்கு கூட பதில் எழுதினோம் என்றால் முதலில் ஒரு தவறு நடந்து இருக்கிறது. வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று சொன்னயோக்கியனே, புத்திசாலியே அதுக்கு இன்னும் ஏன் நீ பதில் சொல்ல வில்லை?

சில நண்பர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். என்ன அவர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று கேட்கிறார்கள். அவர்களிடத்தில் நான் சொல்வதெல்லாம் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது என்ன வழிமுறையை எடுத்து கொண்டேனோ அதே போன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பொய்யன் தொடர்ந்து பொய் சொல்லி கொண்டு இருந் தால் நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது.லட்சுமி நாராயணனை நீங்கள் நியமித்தது உண்மையா? பொய்யா? என்றால் உண்மையில் நியமித்து உள்ளோம். ஏன் நியமித் தோம்? முன்பெல்லாம் ஒருவர் கூட இந்து இல்லை. இவர்கள் வந்து நியமித்து விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் ஒன்றும் தெரியாமல் மக்களை மூடர்கள் என்று நினைத்து கொண்டு பிதற்றுகின்றார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.புதிதாக வழக்கறிஞர்களை நியமிக் கும் பொழுது அவர்களுடைய தன்மை அறிந்து நியமனம் செய்கிறோம். பழைய ஆட்களில் யாரெல்லாம் தவறான நபர்கள் என்று தெரிகிறதோ, சாட்சிரீதி யாக யார் இருந்தாலும் நீக்கி விடுகி றோம். லட்சுமி நாராயணனை நாம் எப்படி நியமனம் செய்கிறோம் என்றால், வக்ஃபு வாரியத்திற்கு விசாரணைக்கு வரும் போது அவருடைய வாதத் திறமை விவாதத்தினுடைய தன்மை களை முழுமையாக கிரகித்து கொண்டு தான் நியமித்தோம். பரங்கிபேட்டையில் உள்ள ஒரு சொத்து வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்து, அந்த சொத்து அவர்களுடையது என்று தீர்ப்பு வந்து விட்டது. உடனே வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜின்னா அவர்களை, இடைக்கால தடைவாங்க சொன்னோம். தடை வாங்கி விட்டு என்னிடத்தில் சொன்னார், ''அண்ணன், நான் என்கின்ற முறையில் இடைகால தடை வாங்கி விட்டேன். ஆனால் வழக்கு பலகீனமாக இருக்கிறது என்றார். உடனே சம்பந்தப்பட்ட வக்ஃபுக்குரியவரை கூப்பிட்டு நாங்கள் சொன்னோம். தாங்கள் ஏதாவது வழக்கறிஞர் வைக்க வேண்டுமானால் லட்சுமி நாராயணனை வையுங்கள் என்று கூறினோம்.லட்சுமி நாராயணன் எனக்கு பழக்கமெல்லாம் கிடையாது. லட்சுமி நாராயணன் வாரியத்திற்கு வந்து இரண்டு முறை வாதம் புரிந்து உள்ளார். அப்ப தான் லட்சுமி நாராயணன் பற்றிய செய்திகளை சேகரிக்கிறோம். லட்சுமி நாராயணன், பாட்டன், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர் குடும்பமே வழக்கறிஞர்கள் ஆவர். தாத்தா வக்ஃபு வாரியத்தில் வழக்கறி ஞராக இருந்துள்ளார் இந்திய துணைக் கண்டத்தில் முதன்மையாக உள்ளார். பெங்களூர் சட்டக் கல்லூரியில் தான் படித்துள்ளார். அது மட்டுமல்ல கோல்டு மெடலிஸ்ட்.ஒரு முறை ஒரு சிறிய வழக்கு, அந்த வழக்குக்காக வாதிட வருகிறார். அந்த ஒரு வழக்கு ஒரே தன்மையுடைய இரு வழக்கு, இரு தரப்பினர்கள் வருகிறார்கள். ஒரு தரப்பினர் வழக்கு விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்து விடுகிறோம்.லட்சுமி நாராயணன் மற்றொரு வழக்குக்காக வருகிறார். ஒன்றரை மணி நேரம் அதற்காக வாதிட்டார். 1920, 1950, 1970 பல்வேறு பட்ட கல்கத்தா நீதி மன்றத்தில் சொல்லப்பட்ட வக்ஃபு சட்டங் கள் திருவாரூரில் நடந்த வழக்குகள் மதுரையில் நடந்த வழக்குகளை தன்னு டைய விரல் நுனியில் வைத்து கொண்டு அதற்குரிய நகல்களை எடுத்துத் தந்து வாதிட்டார். நான் மட்டும் அல்ல அங்கு இருக்கக் கூடிய வாரிய உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வாதத்திற மையை பாராட்டினார்கள். இது மாதிரி யான வழக்கறிஞர்கள் நமக்கு வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படை யில் தான் அவரிடத்தில் நாம் ஒரு ஆளை அனுப்பி ''நீங்கள் வருவீர்களா?'' என்று கேட்டோம்.வக்பு வாரிய வழக்கறிஞராக இருந்தால் என்ன கிடைக்கும்? வக்பு வாரிய வழக்கறிஞர் என்கிற தகுதி கிடைக்குமே தவிர... பணம் கிடைக்காது. ஒரு வழக்குக்கு அங்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்குபவர். வாரியத்தில் நாம் எவ்வளவு கொடுப்போம் 400, 500 ரூபாய் தான் கொடுப்போம் அரசு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அரசு என்ன கொடுக்கின்றதோ அதை தான் நாம் கொடுப்போம் அது கூட மிகவும் குறைவாக உள்ளது, அதி கரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.

இந்த புத்திசாலி (?) தமுமுகவில் இருந்து திருடி சென்ற சொத்துகளுக்காக வழக்கு போட்டாரே எந்த முஸ்லிம் வழக்கறிஞரை வைத்து போட்டார்? முஸ்லிம்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற இயக்கம் என்று சொல்கிற ஒரு அமைப் பைச் சேர்ந்த நீ, ஒரு முஸ்லிம் வழக்கறி ஞரை அல்லவா வைத்திருக்க வேண்டும்?

அது மட்டும் அல்ல ஒரு சிறு சம்பவம் பின்னத்தூரில் ஜமாஅத், குடிகாரர்களை வைத்துக் கொண்டு சில பிரச்சனை செய்தார்கள் அப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அந்த புத்திசாலியிடத்தில் போய் ''என்ன செய்ய லாம்?'' என்று கேட்க அதற்கு அவர் கூறியிருக்கிறார்.

''நீங்கள் இந்து வக்கீல் வைத்தால் மட்டும் பத்தாது; ஆர்.எஸ்.எஸ்.(மெண்டா லிட்டி) யுடையவனாக பார்த்து வை; அப்போது தான், ஒரு வெறியுடன் அழிக்க வேண்டுமென்று வேலை செய்வான்'' என்று கூறியிருக்கிறார்.

இவர் தான் இஸ்லாத்திற்காக உழைக்க வந்தி ருக்க கூடிய ''நவீன மிர்ஸாகுலாம்'' என்று கூறிக்கொள்கிறார். இப்படி கூறுகிறார்களே அவர் கூட நீங்கள் இருந்தீர்களே என்று கேட்கலாம். அவரோடு அந்த சம்பாசணை யில் இருந்தவர் சாட்சியாக அல்லாஹ் மீது ஆணையாக நான் சொல்கிறேன். நீ வைக்கிறவனை ஆர்.எஸ்.எஸ். காரனா பார்த்து வை அதுவும் வெறி புடிச்ச இந்துத் துவா காரனக பார்த்து வை அப்பத்தான் அவர்களை அழிக்க முடியுமா?

நாம் வந்த பிறகு இவர் ஒருவரை தான் நியமித்துள்ளோம் அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி மதுரையிலும் சரி மற்றபகுதிகளிலும் சரி அதிகமான வழக்கறிஞர் இருக்கிறார்கள். சென்னையில் ரமேஷ் என்பவர் திருநெல் வேலியில் சுப்பிரமணி, சகாயதாஸ், திருச்சியில் அருள் காந்தி, கண்ணன், மதுரையில் செந்தில், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம், வேலூரில் வீரராகவன், கடலூரில் பத்மநாதன், சக்கரபாணி, இராமநாதபுரத்தில் அற்புத ராஜ், வெங்கட் ராமன், கோபால் சாமி, கோயம்புத்தூரில் பிரபு, விஜய், சேலத்தில் ரங்கநாதன், ஜெகன் நாதன், காஞ்சிபுரத்தில் சக்கர பாணி செங்கல்பட்டு ஜெகன்நாதன் இவர்கள் எல்லாம் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடவே செய்தி தருகிறேன். இதற்கும் சேர்த்தே ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லுங்கள்.இவர்கள் எல்லாம் நான் வந்து நியமித்தவர்கள் அல்லர் இதற்கு முன்பே போடப்பட்டது. நாம் சில வழக்கறிஞரை தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து வைத்திருப்பதற்கு ஒரு சில சிக்கலான வழக்குகளை பார்ப்பதற்காக வைத்திருக்கி றோம்.

புத்திசாலியே (?) நீ முற்றுகை, ஆர்ப்பாட்டம் பண்ணு மக்கள் உன்னை காரித்துப்புகிறார்கள். இவர் செய்யக்கூடிய குறிப்பாக... இந்த மாதிரியான விஷயங்களில் கூட பாக்கர் சில நேரங்களில் வக்பு பற்றியும் மற்றதை பற்றியும் காரசாரமாக பேசுகிறார் என்று என்னிடத்தில் சொல் கிறார்கள். சிரித்துக் கொள்வேன். என்ன அவர் உள்ளார்த்தமா என்பது எனக்குத் தெரியும். இருக்கக் கூடிய இடத்தில் தன்னுடைய எஜமானன் மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங் களை செய்து அது மாதிரியான அங்கு நடக்கக்கூடிய பொம்மலாட்டம்

பல இடங்களில் ''ஏய் அந்த ஆள் நல்லாதான் செய்கிறான். அந்த ஆளு வக்ஃபு வாரியத் தலைவரான பிறகு தான் வக்பு வாரியம் நல்லா இருக்கிறது'' என்று பாக்கர் பல இடங்களில் சொல்வது சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். அவர் மேடையில் பேசுவதற்கும் அவர் உள்ள ரீதியாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அவர் மனம் வெதும்பிக் கொண்டு வேதனை யோடு அந்த விஷயத்தை சொல்ல வேண்டும். ஏன் என்றால் சில விஷயங் கள் காப்பற்றப்பட வேண்டும். எனவே பாக்கர் சொல்வதை நீங்கள் (மக்கள்) எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அவர் உள்ளத்திற்கு தெரியும் முன்பெல்லாம் நானும் அவரும் பேசி கொள்வோம். போன் செய்து பேசுவேன்; இன்றைக்கும் பெருநாள் வந்தால் வாழ்த்து செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன். முதலில் வருவார் இப்ப வருவதில்லை. நட்புரீதி யாக வேறு நானும் பாக்கரும் 38 நாள் ஒன்றாக சிறையில் இருந்திருக்கி றோம். ஒரே அறையில் இருந்தோம். என்னைப் பற்றி முழுமை யாக அவருக்கும் பாக்கரை பற்றி முழுமையாக எனக்கும் தெரியும். நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் 3 நாள்கள் நீங்கள் பிரயாணித்தீர்கள் என்று சொன்னால் அவர்களை பற்றி தெரியும் 38 நாள் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கி றோம். பாக்கருன்னா யாருன்னு எனக்கு தெரியும். ஹைதர் யார் என்று பாக்கருக்கு தெரியும். எனக்கு என்ன வருத்தம் என்றால் தன்னுடைய உரத்த குரலில் பேசக் கூடியவர் பல நேரங்களில் நிர்வாக குரலில் நியாயமான விஷயங்களை பேசுவதில் ஒரு ஆளாக இருந்தவர் பழைய நண்பர் பாக்கர் இன்றைக்கு இல்லை என்கின்ற வருத்தம் இன்றைக் கும் உண்டு. மனிதருக்கு சில நேரங்களில் தேவைகள் அதிகமாகி விடுகிற நேரங்களில் இப்படியெல்லாம் தவறு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பதி னால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் நாம் இல்லை. நம்முடைய வேலைகள் அதிகம் என்னுடைய சுயவேலைகள் செய்வதில் கூட நான் முடங்கிக் கிடக்கின் றேன். சில விஷயங்களை முதன்மை செயலாளரிடம் ''இது ஏன் இப்படி உள்ளது பழையது இப்படி நடந்துள்ளதாமே'' என்றால் ''என்ன சார் எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு செய்தி தெரிகிறது'' என்று திகைக்கின்ற மதிரியாக தான் வைத்துள்ளோம். இன்றைக்கு வக்ஃபு வாரியத்தில் பழைய நிலை இல்லை. ஆள்கள் குறைவாக இருக்கிறார்கள். அதற்கு அரசிடம் அனுமதியை கேட்டு உள்ளோம். வேலை வாய்ப்பு அலுவலகத் தில் கேட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட் டன. பல நினைவூட்டு கடிதம் அனுப்பி விட்டோம். இன்னும் அவர்கள் அந்த பட்டியலை தரவில்லை. ஏன் என்றால் நாம் முஸ்லிம்கள் மட்டும் தான் வேண்டும் என்று கேட்டு உள்ளோம் வக்ஃபு வாரியத்தில் இது மாதிரியான பணிகளில் தான் பார்க்க முடியும். வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர் இருக்கி றார்கள். ஒருவர் இறந்து விட்டார். சந்திரன் என்பவர் ஒருவர் இன்றும் இருக்கிறார். வந்த உடனே அவரை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பிவிட முடியுமா? அது மட்டும் அல்ல பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டால். கருணை அடிப்படை யில் வேலை கொடுக்க வேண்டும். அதே போல் முஸ்லிம் ஒருவரும் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார். கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுத்து உள்ளோம்.நான் வந்த பிறகு கருணை அடிப் படையில் ஒரு இந்து பெண்ணுக்கும் வேலை கொடுத்து இருக்கிறேன். அதுக்கும் சேர்த்து போராட்டம் நடத்த நியாயம் அநியாயம் பார்க்க வேண்டாமா?இனத்தின் பெயரால் அவருக்கு ஏன் அநியாயம் இழைத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்விடத்தில் நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும். உனக்கு அது பற்றி ஒன்றும் கிடையாது. அல்லாஹ் வுடைய நம்பிக்கை இருக்கின்றவனா இல்லையா என்பது எங்களுக்கு தான் தெரியும் எங்களை பற்றி நீ நன்றாக பேசு, திட்டு; என்ன வேண்டும் என்றாலும் பேசு, எதை பற்றியும் நாம் கவலைப்பட போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல் கிறார்கள் திட்டுகின்றவன் என்ன திட்டி னாலும் திட்டுபவனைத்தான் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள். அதனால் புத்திசாலியே(?) எல்லாத்தையும் நீயே வாங்கிக்கட்டிக் கொள் பிரச்சனை இல்லை.நன்றி : தமுமுக இணையத் தளம்


முகவை தமுமுக வின் கல்வி உதவி

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!
இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!
வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!





















சிங்கப்பூரில் இரத்த தான முகாம்



சிங்கப்பூரில் இரத்த தான முகாம்


வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.
மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.
செய்தி : தமுமுக சிங்கப்பூர்

Monday, June 23, 2008

அன்புள்ள அம்மா...

அன்புள்ள அம்மா...


அவர் நேற்று ரஜிதா. இன்று ஹமிதா. இந்துவாகப் பிறந்து கிருஸ்தவத்தில் இணைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பி.பி.ஏ., படிக்கும் பட்டதாரி பெண். சென்னை மண்ணடியை சேர்ந்த இப்பெண் டியூசன் சொல்லி கொடுப்பதற்காக, ஒரு முஸ்லிம் சகோதரரின் வீட்டுக்கு சென்று வரும் தருணங்களில், அவர் கண்களில் அந்த வீட்டில் இருந்த இஸ்லாம் குறித்த நூல்கள் தனிக்கவனம் பெற்றன.

அந்த நூல்கள் அவருள் பிரளயத்தை, அறிவுத் தாகத்தை தூண்டியதால் கடந்த ரமலானில் ரகசியமாக தண்ணீரை குடித்துவிட்டு நோன்பிருந்திருக்கிறார் வீட்டுக்கு தெரியாமல்!

நாளடைவில் இவரது இஸ்லாமிய தாகம் வெளிப்படையாக தெரிய வர, குடும்பம் கொந்தளித்திருக்கிறது. அதையும் மீறி இஸ்லாத்தை துணிந்து ஏற்றவர், அடைக்கலமும், சட்டஉதவியும் கோரி தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்தார்.

அவரது குடும்பம் காவல்துறை உதவியுடன் தமுமுக தலைமையகம் வர, இவரோ அதிகாரிகளிடம் சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட அவர்கள் திணறிதான் போனார்கள். தன்னை வற்புறுத்தி வீட்டுக்கு அழைக்கும் தாயாருக்கு 4 மணி நேரத்திற்கும் மேல் இஸ்லாத்தை எடுத்துரைத்து, தனது இஸ்லாமிய அனுபவத்தை விவரித்த பாங்கு சுற்றி நின்ற அனைவரையும் கவர்ந்து விட்டது.

சென்னை டெபுடி கமிஷ்னர் காமினியின் அழைப்பின் பேரில் தமுமுக வினரின் பாதுகாப்புடன் சென்ற இவர், அங்கையே தனது நிலையை விளக்கியதுடன், அவருக்கும் இஸ்லாமிய அழைப்பு பணியை செய்ய, அவரே அசந்து விட்டார்.

இப்போது தமுமுகவின் வழிகாட்டலில் மதரஸா கல்வியை கற்கப் போகும் அவர், பாசத்தோடு வற்புறுத்தும் தாயாருக்கு ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார். அவரது அனுமதியுடன் வாசகர்களுக்காக பிரசுரிக்கிறோம். -ஆசிரியர்.



அம்மா நான் உங்களை விட்டு போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். எல்லாவற்றிற்கும் முன்னர் அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நீங்கள் என்னைப் பற்றி கொண்டுள்ள எண்ணமும், என் நலனில் கொண்டுள்ள அக்கறையும் மகத்தானவை. அதே போன்று நான் என் உள்ளத்தில் தேக்கி வைத்துள்ள உங்கள் மீதான அன்பும், பாசமும் வார்த்தைகளில் வடித்துக்கூற முடியாதவை. உங்கள் அன்பு நிறைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எனினும் நான் பெறப் போகும் முஸ்லிம் சன்மார்க்கக் கல்வி என்னைத் தடுத்து நிறுத்துகின்றது. இந்தத் தடை இல்லாவிட்டால், நான் ஒரு கணமும் உங்களை விட்டு பிரிந்திருக்க மாட்டேன். உண்மையில் மார்க்கத்தைக் கற்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும், நான் உணர்ந்திருப்பது தான் நான் உங்களை பிரிவதற்கு காரணம். இருப்பினும் உங்களைப் பற்றிய நினைவால் என் நெஞ்சம் நிறைந்திருக்கிறது. இனி கழியும் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் கருணையை எண்ணிப்பார்க்க போகிறேன். நீங்கள் என் மீது செலுத்தும் அளவற்ற கருணைக்கும், எனக்காக காலமெல்லாம் செய்த தியாகங்களுக்கும் நான் எப்படித்தான் கைமாறு செய்வேனோ? உங்கள் தன்னலமற்ற உதவி, ஒத்தாசைகளை என் நாவினால் எப்படித்தான் வர்ணித்து முடிப்பேனோ? உங்கள் முடிவில்லாத அன்புடன் கூடிய மகத்தான பணிகளுக்கு எந்த விதத்தில் பிரதி உபகாரம் செய்வேனோ? நான் அறியேன் அம்மா! நான் உங்களை விட்டு பிரிவதற்கு நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது தான் காரணம். நான் யாரையும் காதலிக்க வில்லை. எவருடனும் ஓடிபோய்விட வில்லை. இப்படிப்பட்ட தவறான வழியில் நான் ஒருபோதும் செல்லமாட்டேன். ஏனென்றால் நான் உங்கள் மகள். அம்மா நான் உங்கள் மீது மிகவும் அளவற்ற பாசம் வைத்துள்ளேன். இந்த உலகத்தில் உங்களை பிடித்த அளவிற்கு வேறு யாரையும் எனக்கு பிடிக்காது.

என்னை வெறுத்து விடாதீர்கள்! உங்களுக்கு உண்மையிலேயே என்னைப் பிடிக்குமேயானால் என்னை வந்து பார்க்க வேண்டும். இந்த கடிதத்தை படிக்கும் போது நீங்கள் எப்படி வேதனைப் படுவீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

என்னால் எனது நண்பர்கள் யாருக்கும் பிரச்சனைகள் தரவேண்டாம். ஏனெனில் இது நானாக எடுத்த முடிவு. யாரும் என்னைக் கட்டாயப்படுத்தி இஸ்லாத் திற்கு மாற்றவில்லை. நான் சுய நினைவோடு எடுத்த முடிவுதான் இவை. கணேஷ் மாமாவிடம் சொல்லி எந்த ஒரு போலீஸ் பிரச்சனையும் செய்ய வேண்டாம். நான் இப்போது மேஜர். எனக்கு எல்லா முடிவுகள் எடுக்கவும் உரிமை உள்ளதால் இஸ்லாத்தை ஏற்றேன். இதில் எந்த ஒரு உள்நோக்கமும், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. நீங்கள் காவல் துறையினரை அழைத்து வந்து என்னை வரசொன்னாலும் நான் வரமாட்டேன். அது உங்களுக்கு அவமானத்தை தரும். அதை நான் விரும்பவில்லை. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மூலமாக நான் மூன்று வருடம் இஸ்லாத்தின் அடிப்படைக் கல்வி கற்க செல்கிறேன். உங்களுக்கு தமுமுகவிலிருந்து போன் வரும். நீங்கள் தயவு செய்து அங்கு வரவேண்டாம். உங்களை பார்த்துப் பேச எனக்கு தைரியம் இல்லை. என்னைப் புரிந்து கொள்ளுங்கள். தயவு செய்து எந்த தப்பான முடிவும் எடுக்காதீர்கள். மனோஜின் படிப்பிற்கு என்னால் உதவ முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு வேறு யாரும் வேண்டாம். நீங்கள் இருவரும் என்னை வந்து பார்த்தால் போதும். என்னை அனாதை யாக விட்டு விடாதீர்கள். எல்லாருக்கும் இதைப் பற்றி சொல்லி புரிய வையுங்கள். உறவினர்கள். ஆயிரம் சொல்வார்கள், அதை கேட்டுக் கொண்டு என்னை ஒதுக்கி விடாதீர்கள். அம்மா அழாதீங்கம்மா!

ப்ளீஸ்... மேற்கொண்டு எந்தப் பிரச்சனையும் யாருக்கும் தரவேண்டாம். இந்த லெட்டரில் நான் எழுதியதோடு போகட்டும் உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் (தமுமுக) அணுகவும்.

அம்மா, நீங்க ஆசைபட்ட மாதிரியே பி.பி.ஏ., முடித்து எம்.பி.ஏ., படித்து முடிப்பேன். நீங்கள் தயவு செய்து வீடு மாறினாலும். போன் நம்பர் மாற்றினாலும். எனக்கு தயவு செய்து தெரிவிக்கவும். அம்மா ப்ளீஸ் என்னை ஏற்றுக் கொள்ளுங்கம்மா. நான் உங்களை கஷ்டப்படுத்தியதற்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு..

ரஜிதா (எ) ஹமிதா


நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Friday, May 16, 2008

ஜெய்பூர் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கிலிட தமுமுக கோரிக்கை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை:

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்பூரில் நேற்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்து சமூகப் பெருமக்களின் வழிப்பாட்டுத் தலம் உள்பட பொது மக்கள் கூடுகின்ற இடங்களில் நடைபெற்ற இந்த மனித நேயமற்ற குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்க முடியும். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உச்சப்பட்சத் தண்டனையான தூக்குத் தண்டை விதிக்க வேண்டுமென தமுமுக கோருகிறது.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற பயங்கரவாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் காவல்துறை சரியான குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறிக் கொள்கிறது. ஆனால் சரியான முறையில் விசாரணை செய்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் அப்பாவிகளைக் கைது செய்து கணக்கு காட்டுவதால் தான் இந்தப் பயங்கரவாத தாக்குதல்கள் தொடருகின்றன. எனவே மத்திய அரசு இந்த உண்மைகளை கவனத்தில் கொண்டு நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு புலனாய்வுக் குழுவொன்றை அமைத்து இந்த முறையாவது உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இவ்வாறு சரியான குற்றவாளிகளைக் கைது செய்தால்தான் ஜெய்பூரில் நடைபெற்றது போல துயரச் சம்பவங்கள் இனியும் தொடராமல் தடுக்க இயலும்.

Wednesday, May 14, 2008

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு ததஜ

விளம்பரத்துக்காக வழக்கு: த.த.ஜ.விற்கு உயர்நீதிமன்றம் அபராதம்!

சென்னைப் பல்கலைக் கழகத்தின் பணிநியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றவில்லை, எனவே, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என அறிவிக்கக்கோரி த.த.ஜ.வின் வக்கீல் சிராஜுதீன் மூலம் அவ்வமைப்பின் மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் முகோபாத்தியாயா, எம். வேணுகோபால் ஆகியோர், பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்பாக நாளிதழ்களில் இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளதால் இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. எனவே வழக்கு தாக்கல் செய்த த.த.ஜ மாநிலச் செயலாளர் செய்யது இக்பால் 10 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் 6 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்து, வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

விளம்பர நோக்கிற்காக செயல்படும் அமைப்பு என்று உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ததஜ) என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

Tuesday, May 13, 2008

கயவர்களின் காட்டுமிராட்டித்தனம்.....டிசம்பர் 6,1992. ஒரு வீடியோ பார்வை......

வேலூர்க் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை

இன்று வேலூர் கோட்டை மசூதியை மீட்போம்! நாளை பாபர் மசூதியை மீட்போம்! என்ற எழுச்சிகரமான வாசகங்களுடன் மக்கள் கூட்டம் அலை அலையாக வேலூர் கோட்டையை சுற்றி வளைத்து இந்தியாவிலேயே திரும்பி பார்க்க வைத்துவிட்டனர். (புகழ் அனைத்தும் இறைவனுக்கே!)

மே 9 கோட்டை மதில் சுவரை தாண்டி உள்ளே செல்வோம்! பள்ளியை மீட்போம்! என்ற முழுக்கம் வேலூர் மாவட்டத்தையே கிடுகிடுக்க வைத்துவிட்டது. ஒருவாரத்திற்கு முன்பிருந்தே மீடியாக்கள் மிருந்த முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வந்தன. காவல்துறையோ... தொடர்ந்து மிரட்டும் வண்ணம் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் 1 டி.ஐ.ஜி. பல மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏராளமான டி.எஸ்.பி.க்கான இன்ஸ்பெக்டர்கள் என பல மாவட்டங்களிலிருந்தும் இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு பணியில் முதல் நாளிலிருந்தே ஈடுபட தொடங்கினர். கோட்டையை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காகம் கூட மிரளும்படியாக கோட்டையை போலிஸ் சுற்றிவளைத்தது. கோட்டையின் மதில் சுவர்களில் துப்பாக்கியுடன் போலிஸார் நிறுத்தப்பட்டனர்.

அந்தக் காலத்தில் எதிரிப்படையினர் முற்றுகைக்கு வரும்போது அரசன் கோட்டையை காப்பாற்றுவதற்கு எப்படியெல்லாம் காவல்துறையின் ஏற்பாடுகள் இருந்தன. முதல் நாள் இரவிலிருந்தே வேலூர் பதற்றத்தில் ஆழ்ந்தது.

மே 9 அதிகாலை கோட்டையை சுற்றிலும் பரபரப்பு கூடுதலானது. அதற்கேற்க அன்றைய தினம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (வேலூர் பதிப்பு) நாளேடு எல்லார் பார்வையும் தமுமுகவின் மீது என தலைப்பிட்டு பரபரப்பை மேலும் கூடியது. தண்ணீரை பீய்ச்சியடிக்கும் நான்கு வஜ்ரா வாகனங்கள் மூன்று தீயணைப்பு வண்டிகள். இரண்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள், கோட்டை அகழிக்கள் குதித்து நீந்தி உள்ளே செல்பவர்களை பிடிக்க ஐந்து பட்டு மீட்புக்குழுக்கள் என கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை தயார் நிலையில் வைத்திருந்தது. இவையெணைத்தும் தமுமுகவின் 1997 டிசம்பர் 6 போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக இருந்தது. முதல் நாளே தமுமுகவின் தலைவர் ஜாவஹிருல்லாஹ் வேலூரில் தலைமறைவாக இருந்தபடியே பணிகளை முருக்கிவிட்டுக் கொண்டிருந்தார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி, மாநிலச் செலாளர் பி.அப்துஸ் ஸமது, தொழிலாளர் அணி மாநிலச் செயலாளர் ஜெ.அவுலியா ஆகியோரும் முழுவீச்சில் ஒருங்கிணைப்பு பணிகளை செய்த வண்ணம் இருந்தனர். அடுத்த நாள் காலை மாநிலச் செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, காஞ்சி ஜுனைத். மதுரை கௌஸ் ஆகியோரும் பணியில் இணைந்துக் கொண்டனர்.
காலை 10 மணிலிருந்தே மக்கள் கூட்டம் வேலூரின் பல பகுதிகளிலும் அணி திரள தொடங்கினர். கோட்டையின் அனைத்து வாசல்களும் பூட்டப்பட்டதால், கோட்டையின் பின் பகுதியிருந்து பேரணியான புறப்படுவது என திட்டமிடப்பட்டிருந்தது. 11 மணிக்கெல்லாம் கூட்டம் சாரை, சாரையாக திரளத் தொடங்கியது. வெளிமாநிலங்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் டி.வி. கேமரா மேன்களும் பெரும் திரளாக திரண்டு வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பத்திலேயே கட்டுக்கடங்காமல் திரண்டதால் அவர்களை ஓழுங்குப்படுத்தும் பணியில் தமுமுகவினர் படுதீவிரமாக களத்தில் குதித்தனர்.

இதற்கிடையே காவல்துறை போக்குவரத்தில் மாற்றங்களை செய்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் திட்டமிட்டபடி கோட்டையின் பின் பகுதிக்கு வருவதற்கு நேரமாகும் நிலை ஏற்பட்டது. உடனே ஆஸ்பத்திரி சாலையில் காவல்துறை ஏற்படுத்தியிருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டு, தடுப்பு அரண்களை தமுமுகவினர் அகற்றி வாகனங்களை நேரடியாக களத்துக்கு வரும்படி பாதை அமைத்தனர். இதை போலிஸார் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுபோல் மக்கான் சாவடி என்ற இடத்தில் மக்கள் சூழ்ந்துக்கொண்டு கோட்டை நோக்கி நகர்ந்ததும், அவர்களை காத்திருக்கும்படி வேண்டுகோள் விடப்பட்டது. உடனே அவர்கள் திரும்பி பதுங்கி காவல்துறையை குழப்பத்தில் ஆழ்த்தினர். பதறிப்போன காவல்துறை புதிய திட்டமிடல்களை போட்டு தடுப்பு அரண்களுடன், கயிறுகளையும் கட்டத் தொடங்கினர்.

ஆங்காங்கே தீவுத்தீவாக நின்ற கூட்டம் திடிரென ஒன்று சேர்ந்ததும், படுவேகமாக ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. திடிரென ஒரு கூட்டத்தின் ஒரு பகுதியினர் தடையை உடைத்து கோட்டை சுவரை நோக்கி ஒடினர். கோட்டையை சுற்றிலும் அறுபதடி நீள அகலத்தில் அகழி இருந்தது.

கூட்டத்தின் ஒரு சாரார் அகழியில் குதித்து கோட்டைக்குள் நீந்தி செல்லும் முடிவோடு தடுப்பை உடைத்து பாய்ந்து ஒடினர். இன்னொரு கூட்டம் காவல்துறையின் ஐந்தாவது பாதுகாப்பு வளையத்தை உடைத்து தாண்டி ஒடினர். ஒரே நேரத்தில் இரு சம்பவங்கள் நடந்ததால் திணறிப்போன காவல்துறை கூடுதல் காவலர்களுடன் களமிறங்கி அகழியை நோக்கி ஒடியவர்களை தடுத்து நிறுத்தியது. ஐந்தாவது பாதுகாப்பு வளையத்தை தாண்டியவர்களும் காவல்துறையால் பிரிக்கப்பட்டார். இந்த பரபரப்புக்கிடையே தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச்.ஜாஹிருல்லாஹ் ஒரு ஆட்டோவில் வர அவரது ஆட்டோ போக்குவரத்து நெரிசலால் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு தாமதமானது. ஆரம்பத்தில் சுமார் பத்தாயிரமாக இருந்த கூட்டம் தொடர்ந்து பல மடங்காக பெருகிக் கொண்டே போனது. மணி பணிரெண்டை தாண்டியதும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி கூடியதற்கான நோக்கத்தை விவரித்து தொடக்க உரையாற்றினார். அதன் பிறகு தமுமுக தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றினார். கோட்டைக்குள் செல்லும் நோக்கத்தை எடுத்துரைத்ததும் கூட்டம் அல்லாஹு அக்பர் என்று கம்பீரமாய் முழங்கி புறப்பட்டது. அணை ஒன்று உடைத்து காட்டாற்று வெள்ளம் சீறுவதுப் போல் கூட்டம் ஆர்ப்பரிப்புடனும் அடங்காத ஆவேசத்துடனும் புறப்பட, போலிஸாரின் வாக்கி லி டாக்கி கருவிகள் அலரத் தொடங்கியது. அந்த நீளமும், அகலமும் கொண்ட சாலையில் போர் வீரர்களின் கோபத்தோடு கூட்டம் கோட்டை நோக்கி போருக்கு செல்வதும் போல் ஒடிய காட்சி பார்போரை திகிலடைய செய்தது.

சாலையின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான இந்துக்களும் பிற மக்களும் முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். காவல்துறையின் பாதுகாப்பு வளையங்கள் ஒன்றன் பின் முன் படுத்தி கோட்டையை நோக்கி நெருங்க, பேரணியின் நடுப்பகுதி அப்போதுதான் மக்கான் சாவடி அருகே வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் திரல் நீண்டுக்கொண்ட போனது. பேரணியின் முன்னாள் சென்றவர்கள் காவல்துறையின் அடுத்தடுத்த தடுப்புகளை உடைத்து ஆவேசமுடன் கோட்டை நோக்கி முன்னேறினர். காவல்துறைக்கும், தமுமுகவினருக்கும் இடையே தள்ளமுள்ளு ஏற்பட்டது. பாய்ந்து சென்ற தமுமுகவினர் அடுத்தடுத்து தடுத்து தூக்கியெறியப்பட்டனர். ஏராளமானனோர் தடுப்பு அரண்கள் மீது தாண்டும் போது கீழே விழுந்தனர்.
அனைத்து முயற்சிகளையும் காவல்துறை முறியடித்ததால், கோட்டை வாசலுக்கு வெளியிலேயே தமுமுக ஜும்ஆ தொழுகையை நடத்தும் என அறிவிப்பு செய்யப்பட்டது. உடனடியாக சாலையில் பாங்கு சொல்லப்பட்டது. ஏராளமான மக்கள் வரும்போது தொழுகை நடத்த வசதியாக திண்டுகளுடன் வந்திருந்தனர். தண்ணீர் கிடைத்தவர்கள் ஓலு செய்ய, தண்ணீர் கிடைக்காதவர்கள் தயம்மம் செய்துக்கொண்டனர்.

தமுமுக தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஜும்ஆ பேருரையை நிகழ்த்த சுட்டெரிக்கும் 107 டிகிரி வெயிலில் கூட்டம் வியர்க்க, வியர்க்க உரையை கவனித்துக் கொண்டிருந்தது. மறுபுறம் பேரணியில் மக்கள் கூட்டம் வந்துக்கொண்டேயிருந்தது. அவர்கள் ஒலு செய்ய வசதியாக எல்லோருக்கும் தண்ணீர் பாக்கெட்டுகள் இலவசமாக தாரளமாக வழங்கப்பட்டது.

சரியாக மதியம் 1:15 மணியளவில் தொழுகையை வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி தொழுகையை தொடங்கினர். 30 ஆயிரமா? 50 ஆயிரமா? என மக்கள் கூட்டத்தை அளவிட முடியாத காவல்துறை தொழுகையின் போது வரிசையாக கணக்கெடுக்க முயன்று அதிலும் தோற்றது.

காரணம் தொழுகையின் முதல் ரக்கையத் முடிந்த பிறகும் கூட்டம் ஆயிரத்தை தாண்டி வந்துக் கொண்டிருந்தது. அவர்கள் தொழுகையின் அடுத்தடுத்த நிலைகளில் இணைய தொழுகை முடிந்தது. பெரும்பாலும் வேலூரில் மதியம் 1:30 மணிக்கு பிறகுதான் ஜும்ஆ நடைபெறும் என்பதால் கூட்டம் அதை நினைத்துக் கொண்டு தாமதமாக மேலும் வர அவர்களது எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. எனவே இரண்டாவதாக வந்தவர்கள் ஜமாத்தாக தொழ, அதேபோல் மூன்றாவதாகவும் கடைசியாகவும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வர அவர்களுக்காக மூன்றாவது ஜமாத்தும் நடத்தப்பட்டது. அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் தரையில் தொழுதவர்களின் தியாகம் மாகாத்தானது.

107 டிகிரி வேலூர் வெயிலில் வெறும் காலோடு தொழுகையில் 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக நின்றது பெரும் தியாகமாகும்.
அதுபோல் தரையில் முழங்கலை வைத்தப்போதும் சஜ்தா செய்ய உள்ளங்கையையும், நெற்றியையும் கொதிக்கும் தரையில் வைத்தல் போலும் எல்லோருமே துடித்துவிட்டனர்.! ஆம் அல்லாஹ்வின் ஆலயத்துக்காக அந்த வெப்பத்தை பொறுத்துக் கொண்டனர்.! அப்போது எங்கும் உணர்ச்சி மயமான இருந்தது அடுத்து என்ன நடக்குமோ என அழகு வகையான அமைதி நிலவிய போது போலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகங்களை எடுத்துவந்து எல்லோரையும் கைது செய்தனர்.

அப்போதும் கடைசி முயற்சியாக ஏராளமான தமுமுகவினர் மீண்டும் தடையை உடைத்து பாய, ஐ.ஜி.ராதாகிருஷ்ணனோ நேரில் வந்து தடைமீறலை தடுத்து நிறுத்தினார். அப்போது தள்ளுமுள்ளு மீண்டும் ஏற்பட தடையை தாண்டியவர்கள் மீது காவல்துறை தடிகளை கொண்டு தாக்கியது. பலர் ஊமைக் காயமடைய, சென்னையை சேர்ந்த அப்ஃரோஸ் என்பவரின் மண்டை உடைந்தது. ஏற்கனவே அங்கே மதுராந்தகம் சென்னை கே.கே.நகர் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன. அதில் ஒன்று விரைந்து வர அடிபட்ட ரத்தம் வழிந்த தமுமுக சகோதரர் மருத்துவமனைக்கு விரைந்து தூக்கி செல்லப்பட்டார்.

அதன் பிறகு ஐ.ஜி.யின் கவனத்துக்கு பிரச்சனை சென்றது. தொடர்ந்து காவல்துறை தமுமுகவினரை சிறைபிடிக்கத் தொடங்கியது. பேருந்துகளிலும், போலிஸ் வேன்களிலும் நெருக்கிய பிடித்தது, மத்திய தொல் பொருள் ஆய்வுத்துறையே கண்டித்து முழக்கம் எழுப்பியபடியே ஏறிசென்றனர்.

தொடர்ந்து 5 ஆயிரத்தை தாண்டி கைது சென்றுக் கொண்டிருந்த போது போலிஸ் ஏற்பாடு செய்திருந்த 10 மண்டபங்களும் நிறைந்து விழிந்தது.

அதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்களை எங்கு கொண்டு செய்வது என்று தெரியாமல், காவல்துறை வாகனங்கள் வேலூரை சுற்றிக் கொண்டிருந்தன. கடும் வெயிலில் மக்கள் கொந்தளிக்கவும் அவர்களை ஆங்காங்கே சாலைகளிலேயே அவர்களை இறக்கிவிட்டு போலிஸ் வண்டிகள் ஓட்டம் பிடித்தன. ஆனால் கூட்டமோ எதிர்பாராத வகையில் எண்ண முடியாத வகையில் கைதுக்காக காத்திருந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை விட கைது செய்யப்படாமல் சாலையில் நின்றவர்கள் 5 மடங்கு 6 மடங்கு என போலிஸார் பின்னர் தெரிவித்தனர். அவர்களை கலைந்துப் போகும்படி வேண்டுகோள் விடுமாறு தமுமுக தலைவரை, உயர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். நிலைமையை சமாளிக்க காவல்முறையால் முடியவில்லை. நடந்த நிகழ்வுகளும், கூட்டத்தின் எண்ணிக்கையும் எழுச்சியும் 1997 டிசம்பர் 6 போராட்டத்தை அப்படியே நினைவுப்படுத்தியது.

அதன் பிறகு தமுமுக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கைது செய்யப்படாத மக்கள் கலைந்து செல்ல தொடங்கினர். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களை பார்ப்பதற்காக தமுமுக தலைமை நிர்வாகிகள் மண்டபங்களுக்கு சென்றனர். அங்கே போலிஸார் மக்களை உணவு கொடுத்து உபசரித்தாலும் கைதை ஒழுங்காக பதிவு செய்ய போதிய காவலர்களை நியமிக்க வில்லை. இதனால் மக்கள் கோபமடைந்தனர். ஒரு காவல்துறை அதிகாரி எதிர்பாராத வகையில் கூட்டம் பன்படங்கு வந்துவிட்டது. உங்கள் பலத்தை உளவுத்துறையும், மீடியாக்களும் பார்த்துவிட்டன. எனவே பெயர் பதிவு முக்கியமில்லை, எனவே பிரச்சனை செய்யாமல் தயவு செய்து போய்விடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். அதோடு அனைத்து சிறை மண்டபங்களும் திறந்துவிடப்பட்டன.

மக்கள் கூட்டம் வேலூரிலிருந்து வெளியேற... தொடங்க நீண்ட நேரமாயிற்று. திப்பு சுல்தானின் வாரிசுகள் வேலூர் கோட்டையில் 1806 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்தனர். அப்போது முஸ்லிம்கள் வேலூரில் பிரனயமாய் புகுந்தனர். 2008 ஆம் ஆண்டில் 202 ஆண்டுகள் கழித்து அதே கோட்டையை நோக்கி முஸ்லிம்கள் திப்புசுல்தானின் வாரிசுகள் தொழுகை நடத்திய பள்ளிவாசலை மீட்க பிரனயமாய் புறப்பட்டு வந்தனர்.
ஆம்! வரலாறு புதிய ஆத்தியாங்களோடு தொடர்கிறது. இது தொடக்கம் தான் என்பதை புரிய வேண்டியவர்கள் புரிய வேண்டும்!

உதயமானது தமுமுக மகளிர் அணி...

அநீதிக்கு எதிராக அணி திரள்வோம்!
எழுச்சிகரமான தீர்மானங்களுடன் கூடிய தமுமுக மகளிர் அணி மாநில செயற்குழு


சமுதாயத்தில் நடக்கும் அநியாயங் களை தட்டிக் கேட்பதற்கும், மறுக்கப் பட்ட உரிமைகளைப் போராடி பெறுவதற் கும் சமுதாய ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற முஸ்லிம் பெண்களின் போர்க்குரல் தமுமுக மாநில மகளிரணி செயற்குழுவில் எதிரொலித்தது. இஸ்லாமிய அடிப்படையில் சமுதாயத் தொண்டாற்றிட மகளிருக்கும் களம் அமைத்து கொடுப்பதற்கான முதன் முயற்சியாக மகளிரணியின் மாநில செயற்குழு திருச்சி சிங்காரத் தோப்பில் உள்ள ஜெம் பேலஸ் அரங்கில் கடந்த 27.04.2008 அன்று நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 80 பெண்கள் மாவட்ட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டனர்.

தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில், சகோதரி சாஜிதா அவர்களின் திருக் குர்ஆன் விளக்கவுரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. சகோ.கோவை சாதிக் அறிமுக உரை நிகழ்த்தினார். தமுமுக வின் செயல்பாடுகள் மற்றும் பொதுவான தலைப்புகளில் சகோதரிகளின் கேள்விகளுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாஃயி பதிலளித்துப் பேசினார். மகளிர் அணி தொடர்பான பல்வேறு விளக்கங்களும் சகோதரிகளின் ஆலோசனைகளும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. தங்கள் சமுதாயப் பணிக்கு எங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப் பும் தேவை என நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆபாச, கலாச்சார சீர்கேடுகளை பரப்பும் தொலைக்காட்சி தொடர்களை தடை செய்ய வேண்டும். பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும். 20லி20 கிரிக்கெட் போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஆடும் ஆபாச நடனத்தை நிறுத்த வேண்டும், விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களுடன் எழுச்சியாக தொடர்ந்த செயற்குழுவில் இறுதியாக தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் நிறைவுரையாற்றினார். முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய கட்டமைப்பில் பேணுதலாக சமூக பணிகளை ஆற்றுவது எப்படி என்று விளக்கிய பேராசிரியர் அவர்கள், ஸஹாபா பெண்கள் வாழ்விலிருந்து மேற்கோள்களை காட்டி மகளிர் அணி செயல்பட வேண்டிய விதத்தை எடுத்துரைத்தார்.

சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள கலாச்சார சீர்கேடுகள், முஸ்லிம் பெண்களிடையே உள்ள மூடநம்பிக்கைகள், சினிமா மற்றும் சின்னத்திரை தொடர்களின் மீதான மோகம் ஆகியவற்றை ஒழிக்கவும் மார்க்க மற்றும் சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் சூளுரைத்தவர்களாக, மகளிர் அணி வீராங்கனைகள் புறப் பட்டனர். முஸ்லிம் சமுதாயத்தின் சரிபாதி யாக உள்ள முஸ்லிம் பெண்களிடையே மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக் கையை மகளிர் அணி செயற்குழு ஏற்படுத்தியுள்ளது.
செயற்குழுவுக்குப்பின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. செயற்குழுவுக் கான ஏற்பாட்டை திருச்சி மாவட்டத் தலைவர் ஹக்கீம், செயலாளர் அப்துர் ரஹீம், பொருளாளர் பைஸ் அஹ்மது தலைமையிலான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



மகளிர் அணி நிர்வாகிகள்

மாநில மகளிர் அணிச் செயலாளர் சகோதரி. கோவை சாஜிதா (க/பெ.கோவை சாதிக் மாநில துணைச் செயலாளர்)

மாநில மகளிர் அணி பொருளாளர் : டாக்டர் எஸ்.ஷமீமா (க/பெ.பொறியாளர் ஷாநவாஸ் குவைத் மண்டலச் செயலாளர்)

து.செயலாளர் : சகோதரி ரஹ்மத் நிஷா ஆலிமா (க/பெ. மர்ஹும் அப்துர் ரஹீம்)

து.செயலாளர் : சகோதரி ஷரீபா (க/பெ.ஜைனுல் ஆபிதீன் மாநில செயற்குழு உறுப்பினர்)