
தமுமுக கிருஷ்ணகிரி நகரம் சார்பாக கடந்த 14.6.2008 அன்று கிருஷ்ணகிரி பழையபேட்டை பூரா மசூதி அருகில் 'சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இதில் தமுமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இக் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி செயலாளர் வழக்கறிஞர் அன்வர், வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி மற்றும் கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நன்றி :பதிப்பு தமுமுக இணைத்தளம்.
No comments:
Post a Comment