Monday, May 25, 2009

கடையநல்லூர், அதிரை மற்றும் நாமக்கலில் ஆர்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களை கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக குண்டர்களை கண்டித்து கடைய நல்லூர், அதிராம்பட்டினம் மற்றும் நாமக்கலில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்


அதிராமப் பட்டிணம்


நாமக்கல்


நன்றி : த.மு.மு.க இணையதளம்.

ம.ம.க.வினர் மீது பொய் வழக்குகள்மத்திய சென்னை வன்முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
திமுக கும்பல் ஒன்று கள்ள ஓட்டுப் போட முயன்றுள்ளது. இதை தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங் களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி யுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியுள்ளது.

இதுதான் சிறுபான்மையினரை பாது காக்கும் செயலா? இவர்தான் சிறுபான் மையினரின் பாதுகாவலரா? இஸ்லாமிய சமுதாயத்தினர் மீது திமுகவினர் நடத்தியுள்ள கொலைவெறித் தாக்குதல் களுக்கு எனது கடுமையான கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களை விரட்டியடித்துவிட்டு கள்ள ஓட்டு போட முயன்ற கும்பலை மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலியும், அவரது கட்சியினரும் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளனர். அப் போது ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கள்ள ஓட்டு போட வந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள் ளது. 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறைத் தாக்குதலும், இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த போலீசாரின் செயலும் கண்டிக்கத்தக்கது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று சென்னையில் ஆளும் கட்சி குண்டர்களும், ரவுடிகளும் திட்டமிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உருட்டுக் கட்டைகளாலும் இரும்புக் குழாய்களாலும் தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்
இது திட்டமிட்ட வன்முறைத் தாக்கு தலாகும். முதலமைச்சரின் பேரன் போட்டியிடுகின்ற தொகுதி என்பதால் சிறு பான்மை மக்கள் மீது ஆத்திரத்தோடு திமுக குண்டர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது ஆளும் கட்சி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளி கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நடத்தப்பட்ட அராஜகத்துக்கு விளைவுகளை அனுப விக்க நேரும் என எச்சரிக்கிறேன்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
மனிதநேய மக்கள் கட்சியினர் மீது நடந்த தாக்குதலைக் கண்டிப்பதோடு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்பு களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
நன்றி: த.மு.மு.க இணையதளம்.

P.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)



குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்தஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் "குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார்.

ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.

மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!
மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!
பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !
மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.
மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!

நன்றி : தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி. நன்றி: அதிரை போஸ்ட்

வெற்றியை இழந்திருக்கிறோம் களத்தை இழக்கவில்லை ! நிகழ்காலம் கைவிட்டிருக்கலாம் எதிர்காலம் நமதே! இன்ஷாஅல்லாஹ் !!!

15வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடம் ஏறியிருக்கிறது. பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் கொள்கைகளில் சிறிய அளவு வித்தியாசம்தான் இருந்தாலும், பாஜகவுக்கு காங்கிரசு கட்சி பரவாயில்லை என்ற அளவில் சிலர் நிம்மதி அடையலாம்.
எனினும் லாலுபிரசாத் யாதவ், முலாயம்சிங் யாதவ், இடதுசாரிகள், தெலுங்குதேசம் என மூன்றாவது, நான்காவது அணிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு புதிய அணி ஆட்சியமைத்திருந்தால் அது ஒடுக்கப்பட்ட, நலிந்த மக்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.
இது நடைபெறாவிட்டாலும், பாசிச சக்திகள் முடக்கப்பட்டது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இன்றைய நிலையில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி பீஹாரில் 12 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது. 1989ல் ராம்விலாஸ் பாஸ்வான் தனது சொந்தத் தொகுதியான ஹாஜிபூரில் நான்கரை லட்சத்துக் கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
பணபலமும், படைபலமும் கொண்ட இக்கட்சி கள் கூட்டணி பலத்துடன் நின்று தோல்வியைத் தழுவியிருக்கும் போது மனிதநேய மக்கள் கட்சி தோல்வியடைந்தது ஆச்சரியமில்லை.
அரசியலில் தோல்விகள் தவிர்க்க முடியாதது. திமுக 1957ல் போட்டியிட்டபோது, வெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல்வி அடைந் தது. டெபாசிட்டை பறிகொடுத்தது.
1991ல் பா.ம.க. ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி யில் வெற்றி பெற்று பிற இடங்களில் படுதோல் வியை சந்தித்து டெபாசிட்டை இழந்தது.பல அரசியல் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. பலர் படுதோல்விகளை சந்தித்திருக்கிறார்கள்.
டெபாசிட் தொகைகளை இழந்த கட்சிகள் பின்னாளில் ஆளுங்கட்சிகளாகவும், எதிர்க்கட்சிகளாகவும் அதிகாரத்தை ஆட்டுவிக்கும் கட்சிகளாக வும் மாறியிருக்கின்றன.
இன்று தமிழகத்தில் பிரபல கட்சியாகத் திகழும் தே.மு.தி.க. இத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது.
கட்சி ஆரம்பித்து தொடர் தோல்விகளை சந்தித்த மதிமுக வெகு காலத்திற்குப் பின்புதான் அரசியல் அங்கீகாரம் பெற்றது.
1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே திமுக தப்பிப் பிழைத்தது.
1984 தேர்தலுக்குப் பின்னால் உ.பி. மாநிலத்தில் படுதோல்விகளையும், மந்தமான வாக்குகளையும் பெற்றுவந்த காங்கிரஸ் இப்போதுதான் 20 மக்களவைத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
இந்திரா காந்தி, காமராஜர், அண்ணா போன்ற பிரபலங்கள் எல்லாம் தேர்தலில் தங்கள் தொகுதி களில் தோற்றவர்கள் என்பதை நினைவூட்டு கிறோம்.
மாபெரும் அறிவுஜீவிகளாக கருதப்படும் ப.சிதம்பரமும், மன்மோகன்சிங்கும் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டவர்கள் என்பதும், பிறகு அவர்கள் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் ஆனார்கள் என்பதும் வரலாறு.
இன்று பிரபல தலைவர்களாக உள்ள ஸ்டாலின், ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள் களத்தில் தோல்வி கண்டு மீண்டவர்கள்தான்.
தேர்தல் களம் என்பது தோல்வி, படுதோல்வி, விரக்தி, ஏமாற்றம் இவையாவையும் உள்ளடக் கியது என்பதை மறந்துவிடலாகாது. இதை ஒரு சவாலாக ஏற்றால்தான் அடுத்த வெற்றிகளைக் குவிக்க முடியும்.
தேர்தலைப் பற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டவர்களுக்கும், போராட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டு லட்சியத்துக்காக அரசியலுக்கு வந்திருக்கும் ம.ம.க. தொண்டர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
இனிதான் நமக்கு பணிகள் அதிகமாக காத்திருக் கிறது. காடுகளைக் கடந்து விட்டோம். இனி மேடுகளைத் தாண்ட வேண்டும்.
போர் வீரர்களுக்கு ஓய்வில்லை. ம.ம.க.வினருக்கு தோல்வி இல்லை.

நன்றி : த.மு.மு.க இணையத்தளம்.

Sunday, August 10, 2008

அதிரை த.த.ஜ வும் கிறிஸ்தவ பாதிரியும்!

"ததஜவின் இரண்டாவது ஹீரோ பாக்கரைப் பற்றி மட்டும் கண்டுக்கொள்ளாதது ஏன்? அவர்மீது எத்தனை பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று தெரியாதா உங்களுக்கு? அவரை ஒரு பெண்னுடன் தவறாக சென்றதாக வந்த குற்றச்சாட்டிற்காக சில நாட்கள் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக்கிவிட்டு (உள்ளுக்குள் என்ன நடந்ததோ) சில நாட்கள் கழித்து மீண்டும் பதவியில் சேர்க்கப்பட்டார். அது ஏன்?" என்று அதிரை எக்ஸ்ப்ரஸில் அபு பக்கர் என்பார் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அதிரை த.த.ஜ வை சேர்ந்தவர்கள், "பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்." என விளக்கம் கொடுத்துள்ளார்கள்...! அதாவது, எல்லா இயக்கத்திலும் தீயவர்கள் உள்ளார்கள் எனவே, இது என்ன இதை விட இமாலய குற்றம் செய்து அதற்கு, மார்கத்தை காரணம் காட்டாமல் இருத்தால் ஏற்றுக்கொள்வோம்...!என்கிற தொனியில் கூறியிருக்கிறார்கள். பத்து ரூபாயை கிறிஸ்தவ பாதிரியிடம் கொடுத்து "மண்ணித்து விடும்" என்றதும் "உன் மண்ணிப்பை ஆண்டவர் ஏற்றுக்கொன்டார்" என்பார் கிராமத்து பாதிரி! அதுப்போல் அல்லவா இருக்கிறது.?

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

ததஜ ஹீரோ பீ.ஜெயும் உளவுத்துறையும்!

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பள்ளிவாசளைக் கைப்பற்றுவதற்காக தொழுகையைத் தடுக்கும் அநியாயத்திற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்.,உங்கள் ததஜ ஹீரோ பீஜே தனது எதிரி என்பதால் அவர்களை அரசுக்கு காட்டிக்கொடுத்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்வதுடன்;, மக்கள் தனது எதிரிகளை இழிவாக கருதவேண்டும் என்பதற்காக மாற்றி மாற்றி பேசும் பொய்களைப் பாருங்கள்.,//அதிரை ட்ரூத் மற்றும் ததஜ சம்பந்தமாக வினவியுள்ள கேள்விகளுக்கு பதில்கள்,1. ததஜ வை சார்ந்து அதிரை ட்ருத் நடத்தப்படவில்லை. ததஜ வில் உள்ளவர்களும் அதிரை ட்ருத் வலை தளத்தில் பங்களிப்பாளர்களாக இருக்கிறார்கள் அவ்வளவுதான்.//அதிரை ட்ருத் முழுக்க முழுக்க அதிரை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடத்தப்படுகின்றது என்பது தான் உன்மை. வேண்டுமானால் பெயருக்காக ஒரு சிலரை சேர்த்திருக்கலாம். ஆனால் அவர்கள்கூட அந்த தளத்தில் தவ்ஹீத் ஜமாஅதின் தவறுகளை சுட்டிக்காட்டி எதிர்த்து எழுத முடியாது என்பதுடன் அந்த ஜமாத்திற்கு ஆதரவாக மட்டுமே உங்கள் தளத்தில் செய்தி வெளியிடப்படும் என்பதே உன்மை. அதற்கு ஒரு சாண்று நீங்கள் இந்த கமென்டிலேயே தவ்ஹீத் ஜமாத்தைக் காப்பாற்றுவது போண்று தான் எழுதியுள்ளது. குறிப்பாக பாக்கர் செய்த செயலுக்கு மார்க்கம் காரணமாக சொல்லப்படவில்லை என்று சொல்லியுள்ளதும், அவர் போண்றோர் பல இயக்கத்திலும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்று எழுதியுள்ளதும், குர்ஆன் ஹதீசை போதிக்கக்கூடிய சகோதரர்கள் நடத்தும் பள்ளியில் ஜமாத் தொழுகை நடத்தப்பட்டபொழுது தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தலைவர்களால் குறுக்கே உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு செய்ததை நியாயப்படுத்தி நீங்கள் எழுதியுள்ளதிலிருந்தே உங்கள் தளம் எந்த கொள்கைச்சார்ந்தது என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. //2. நடுத்தெரு சிஷ்தியைப் பற்றி கருத்துக் கணிப்பு நடத்தும், நீங்கள் ததஜ வின் பாக்கரின் தவரைப் பற்றி ஏன் கருத்துக்கணிப்பு நடத்தவில்லை என்று வினவியுள்ளீர்கள். சிஷ்தி தான் செய்யும் செயலுக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டுகிறார், பாக்கர் செய்தது தவறு என்று எல்லாருக்கும் தெரியும். பாக்கர் தான் செய்த தவருக்கு மார்க்கத்தை ஆதாரமாக காட்டவில்லை. அதனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. எல்லா இயக்கங்களிலும் இது போன்ற தவறை செய்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ததஜ வை மட்டும் தான், நீங்கள் பெரிது படுத்துவீர்கள்.//பாக்கர் தவறு எல்லோருக்கும் தெரியும் என்றப்பிறகு உங்கள் தவ்ஹீத் ஜமாத்தில் பாலியல் குற்றச்சாட்டிற்காக விளக்கப்பட்ட சிறிது காலத்திலேயே (உலகத்திலேயே உன்மையான இஸ்லாத்தைப் பின்பற்றிக்கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட ஜமாத்திற்கு) பொதுச்செயலாளராக ஆக்கியது ஏன்? வெட்கமாக இல்லையா? இது போன்றவர்கள் பல இயக்கங்களிலும் இருக்கின்றார்கள் என்று சொல்வது தான் உங்கள் இஸ்லாமியப் பற்றா? மார்க்கத்தைப் போதிக்கக்கூடிய இயக்கங்களிலேயே இது போன்றவர்கள் இருக்கும் போது பொது மக்கள் கூடும் தர்காவில் நடக்கும் சில்மிஷ விளையாட்டை கண்டிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது என்று தர்கா ஆதரவாளர்கள் கேட்டுவிட மாட்டார்களா? ததஜ மத்ஹப்பை விட்டு வெளியே வாருங்கள் சகோதரர்களே! அதில் இருந்துக்கொண்டு யாரைப்பற்றியும் கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை என்பது தான் எனது கருத்து.//3. அடுத்தாக, அதிரை ட்ரூத், நமது ஊர் அதிரையில் உள்ள மார்க்கத்திற்கு மாற்றமான பிரச்சனைகளை அம்பலபடுத்தி, அதை சீர்திருத்துவது தான் அதன் நோக்கம்//உங்கள் தலைமையிடம் அசிங்கத்தை வைத்துக்கொண்டு மற்றவனைத் திருத்துவது என்பது ஏற்புடையதாக தெரியவில்லை. அந்த கழிசடைகளை ஒதுக்கிவிட்டு மற்றவர்களைத் திருத்த முயலுங்கள்.//4. ததஜ ஏன் தனி பெருநாள் தொழுகை நடத்த ஆரம்பித்தது என்று கேட்டுள்ளீர்கள்? தவ்ஹீத் சகோதரர்களால் நடத்தப்படும் பெருநாள் தொழுகையில் ததஜ வின் பேச்சாளர்களுக்கு மட்டும் அனுமதி தர மறுத்தார்கள். ததஜ எங்கள் பேச்சாளர்கள் மட்டும் தான் பேச வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, ஒரு பெருநாளிலாவது, எங்களின் பேச்சாளர்களையும் அனுமதியுங்கள் என்று கேட்டது, அதை அவர்கள் மறுத்தார்கள்.//இது மிகத் தவறான தகவல். உன்மையில் என்ன நடந்தது என்றால் பெருநாள் தொழுகையை ததஜ பெயரிலேயே நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் அதிரை ததஜவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் துபையிலிருந்து வந்த ததஜவினரும் அடக்கம். (பெயர் வெளியிட விரும்பவில்லை. தேவைப்பட்டால் பெயர் வெளியிடப் படும்) அப்பொழுது (ஈத் தொழுகையை தொடர்ந்து நடத்தி வரும் தற்போது எந்த இயக்கத்தையும் சாராத) அதிரை ஈத் கமிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் உங்கள் தாயி அஷ்ரப்புதீன் ஃபிர்தவ்சியே தொழுகையும் நடத்தட்டும், பயானும் செய்யட்டும், ஆனால் ஈத் கமிட்டி என்றப் பெயரிலேயே ஒரே இடத்தில் நடத்துவோம் என்று சொன்னதற்கு, அதை ஏற்றுக்கொள்ளாத அதிரை ததஜவினர், எங்களுக்கு தனித்தன்மைத் தான் முக்கியம், நாங்கள் எங்கள் பெயரிலேயே தனியாகவே நடத்துவோம் என்று கூறிவிட்டனர். இது தான் நடந்தது. ஒரு வாதத்திற்காக நீங்கள் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பேச்சாளரை அழைக்கவில்லை என்பதற்காகவெல்லாம் ஊர்கூடி தொழும் தொழுகையைப் பிரித்து குழப்பம் செய்வது தான் உங்கள மார்க்கமா? அந்த தொழுகை இது வரை நடத்தப்பட்டதில் எந்த பேச்சாளராவது நீங்கள் சொல்லக்கூடிய தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார்களா? என்ன கொள்கையோ உங்கள் தவ்ஹீத் கொள்கை, புரியவில்லை சகோதரா? //5. ததஜ ஒரு பள்ளியை அபகரிக்க பார்க்கிறது என்று குற்றம்சாட்டி, ஒரு வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளீர்கள். இதற்கு, மறுப்பாக ததஜ வும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளது, ஆதாரத்துடன், அதையும் கொஞ்சம் பாருங்கள். உண்மை தெரியும். ஜாக் தவ்ஹீத் எதிராக சென்று கொண்டுருக்கிறது. மட்டுமல்லாமல், எல்லா தவ்ஹீத் சகோதரர்களாலும் சேர்ந்து கட்டப்பட்ட பள்ளியை ஜாக் தான் அபகரித்தது முதலில், அது தான் பிரச்சனைக்கு காரணம். ஒரு சாராரின் பேச்யை கேட்டுவிட்டு, அதை அப்படியே பரப்பாதீர்கள்.//எந்த அளவுக்கு உங்களுக்கு ஜமாத் வெறி முற்றிவிட்டது என்று பார்த்தீர்களா சகோதரா! முதலில் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்துக்கொள்ளுங்கள். அந்த வீடியோவில் பீஜேயும் சைபுல்லாஹ் ஹாஜாவும் அந்தப் பள்ளி சம்பந்தமாக முரண்பட்டு பேசுவது மிகத் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. மட்டுமல்ல இவர்கள் அளித்துள்ள பதில் சீடியில் அந்த முரண்பாட்டிற்கு எந்த மறுப்பும் கொடுக்கப்படவில்லை. அது மட்டுமல்ல அது ஜாக்கிற்கு சொந்தமானது என்று கோர்ட் தீர்ப்பு வந்தப்பிறகுதான் உங்கள் ஜமாத்தின் உயர்மட்ட தலைவர்களின் தலைமையில் அந்த தொழுகையைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விஷயத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்போம் என்று சொன்னவர்கள் முஸ்லீம்களின் ஒற்றுமை விஷயத்ல் அது போல் கோர்ட் தீர்ப்பை மதிக்க மறுப்பது ஏன்? முஸ்லீம்கள் தானே இழிச்சவாயர்கள் உங்கள் ஜமாத்தார்களுக்கு. அதனால் தான் அந்த அக்கிரமத்தை நடத்திக் காட்டினர். ஒரு வாதத்திற்காக அந்த பள்ளி விவகாரத்தில் ஜாக் மீது தவறு இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதற்காக பள்ளிவாசல் சார்பாக ஜமாத் தொழுகை நடந்துக்கொண்டிருக்கும் பொழுது அந்த தொழுகையை தடுத்துதான் உங்கள் வீரியத்தை காட்ட வேண்டுமா? இது தான் உங்கள் தவ்ஹீதோ! இதைத்தான் உங்களுக்கு குர்ஆன் ஹதீஸ் கற்றுத்தரும் பாடமோ! உஙகள் ஜமாத்தினரை திருத்துவரை விட்டுவிடுவோம். தவ்ஹீத் ஜமாத்தினரின் தொழுகை தடுப்பு போராட்டத்திற்கு ஆதரித்து எழுதியதற்காக நீங்களே முதலில் தவ்பா செய்துக்கொள்ளுங்கள். நான் மற்றொரு லிங்க் கொடுத்திருந்தேன். பீஜே உளவுத்துரையிடம் சகோதர இயக்கத்தினரை காட்டிக்கொடுப்பதும், அவர்கள் தங்கள் எதிரிகள் என்றிருப்பதால் அவர்களைப் பற்றி பொய்யான செய்திகளை முரண்பாடாக தெரிவிப்பதும் குறித்து ஒரு வீடியோ ஆதாரமும் கொடுத்திருந்தேன். அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லை என்பதிலிருந்தே அவர் ஒரு மகா கொடிய பொய்யர் என்பதை உங்கள் உள் மனது ஒத்துக்கொண்டுள்ளது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!ஆபூபக்கர், துபை

நன்றி : அதிரை போஸ்ட் இணையத்தளம்.

Monday, June 30, 2008

மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!


கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்ற‌இளைஞர் சமுதாயமே! - ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!

பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!

நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.

நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்காத‌ல் என்று கைகோர்த்து - இதும‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!

ம‌துவுக்குள் மாட்டிதின‌ந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!

ஆடையில் ஆர‌றை குறைப்புஅதில் ஓரிரை ம‌றைவுபாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு - இதும‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!

இளைஞ‌ர் கூட்ட‌மே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!

மரணத்தை நினைத்துப்பார்!

அன்புட‌ன்
எம்.எச்.ப‌ஸ்மிய்யா

அல்குர்ஆன் விரிவுரைக்கான‌ க‌ற்கை வ‌குப்பு மாண‌வி

கிருஷ்ணகிரியில் பொதுக்கூட்டம்


தமுமுக கிருஷ்ணகிரி நகரம் சார்பாக கடந்த 14.6.2008 அன்று கிருஷ்ணகிரி பழையபேட்டை பூரா மசூதி அருகில் 'சமூக விழிப்புணர்வு பொதுக்கூட்டம்' நடைபெற்றது. இதில் தமுமுகவின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இக் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை செய்யது, மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் அணி செயலாளர் வழக்கறிஞர் அன்வர், வேலூர் மாவட்ட உலமா அணி செயலாளர் எஸ்.எஸ். நாசர் உமரி மற்றும் கிருஷ்ண கிரி, தர்மபுரி, வேலூர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நன்றி :பதிப்பு தமுமுக இணைத்தளம்.

Sunday, June 29, 2008

அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம் - இன்றும் அதிர்ந்தது

டெல்லி: அந்தமானில் இன்று அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களாகஅடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 5 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று காலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. காலை 6.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ் .