Wednesday, June 25, 2008

அல்லாஹ் காப்பற்றுவானாக ஆமீன்...


தற்கொலைப்படையை உருவாக்கும் சிவசேனா!கொந்தளிக்கும் இந்தியா!!---சத்தியவேந்தன்

பால்தாக்கரே என்ற பழம்பெரும் (ச்சாளி) பயங்கரவாதியின் தேசத்துரோக ஒற்றுமை குலைக்கும், வெறியூட்டும் செயல்கள் சமீபத்தில் எல்லை மீறியுள்ளது.
ஹிந்துத்துவா தற்கொலைப்படை அமைக்க வேண்டும் என அபாயகரமான கருத்தை வெறியுடன் வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நவி மும்பையிலும், தானேயிலும் குண்டுவைத்த சங் பயங்கரவாதி களின் செயல்கள் நெஞ்சைத் தொடுவதாக அமைந்துள்ளது என்றும் விவஸ்தையில்லாமல் உளறியுள்ளார்.
குட்டிப் பாகிஸ்தானாக ஏழை வங்காள மக்கள் வாழும் பகுதிகளை வர்ணிக்கும் பால்தாக்கரே அங்கெல்லாம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வேண்டும் என்று இரக்கமே இல்லாமல் பிதற்றியுள்ளார்.
பால்தாக்கரேயின் வெறித்தனமான இந்தக் கருத்தை சிவசேனாவின் அதி காரப்பூர்வ இதழான சாம்னாவில் தலையங்கமாக எழுதியிருக்கிறார்.
இவரது இந்த வெறிக்கருத்து வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நாடெங்கும் ஆத்திர அலைகள் பற்றிப் பரவுகிறது.
நடுநிலையாளர்களும், பல்வேறு அமைப்புகளும் 'சிவசேனா தற்கொலைப் படைகள்' விவகாரம் குறித்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தனது கண்டனத்தை அழுத்த மாகப் பதிவு செய்துள்ளது. பால்தாக்க ரேயை கைது செய்யாவிட் டால் மக்கள் சக்தியைத் திரட்டி போராடப் போவதா கவும் அது எச்சரித்துள்ளது.
பால்தாக்கரே என்ற பயங்கரவாதி யின் வெறித்தூண்டுதல் இது முதல் முறையல்ல.
35 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக் கணக்கான தமிழர்களை மும்பையிலிருந்து விரட்ட காரணமாக இருந்தவர். தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்த பாசிச பயங்கரவாதி பால்தாக் கரே தண்டிக்கப்படவில்லை.
1993ல் மும்பையில் இவரது தூண்டு தலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை படுகொலை வெறியாட்டத்தில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சூறையாடப்பட்டன. மும்பை கலவரம் குறித்து விசாரணை செய்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணைக் கமிஷன் மும்பை படுகொலைகளின் பின்னணியில் பால்தாக்கரேயின் சதிக்கரங்கள் இருந்ததாக ஆதாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.
பைத்தியம் பிடித்த குரங்குகள் குடித்த கதை போல பிதற்றித்திரியும் இவரை அடக்கி வைக்காவிட்டால் நாட்டில் மேலும் பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற அதுவே முழுமுதற் காரணமாகிவிடும்.
மும்பையில் இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்புகளுக்கும் தற்கொலைப்படைகளை உருவாக்குவேனென கூறும் வெறியனுக்கும் தொடர்பு இருக்கிறதா? என தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
சுளுக்கெடுக்கும் வேளை இது. தாமதித்தால் சூழ்ச்சிகள் சூழத் தொடங்கிவிடும். பயங்கரவாதிகளை சுளுக்கெடுப்பதில் சுணக்கம் காட்டக்கூடாது. மத்திய அரசே உஷார்!

பதிப்பு : தமுமுக


கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தமுமுகவினர் 500 பேர் கைது



கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை புறநோயாளிகளும், ஆயிரத்து 500 உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டம் மட்டுமல்லாது ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாக போக்கை கண்டித்து அரசு ஆஸ்பத்திரி முன்பு 24-ந் தேதி காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி தமுமுக அறிவித்திருந்தது. இவர்களது ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்க வில்லை. போலீசார் அனுமதி கொடுக்கவிட்டாலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று த.மு.மு.க. அறிவித்தது.இதை தொடர்ந்து நேற்று (24-06-08) காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் பீரங்கி வண்டிகள், வஜ்ரா வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தப்பட்டிருந்தன.ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சி ரோடு எல்.ஐ.சி. அலுவலகம் வரை த.மு.மு.க. கொடி கட்டப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஏராளமான த.மு.மு.க.வினர் ஆஸ்பத்திரி எதிரில் உள்ள பஸ்நிலையம் முன்பு குவியத்தொடங்கினார்கள். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமானது. பின்னர் 11.15 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் ஏ.அப்துல்பஷீர், மாவட்ட செயலாளர் எம்.சாகுல் ஹமீது, மாவட்ட பொருளாளர் இ.அகமது கபீர், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.காதர் உசேன், துணை செயலாளர் எஸ்.நூர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில செயலாளர் உமர் கண்டன உரை நிகழ்த்தினார்.ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே "திடீரென்று" ஒருவரை ஸ்டெச்சரில் படுக்க வைத்த நிலையில் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைசேர்ந்த 500 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் அவினாசி சாலையில் உள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் தலைமையில் ஏராளமான போலீசார்பாதுகாப்புபணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய த.மு.மு.க. மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் என்.கே.அஸ்ரப் கூறியதாவது:- அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வசதி படைத்தவர்கள் வருவதில்லை. தினக்கூலிகளாகவேலை பார்ப்பவர்கள் தான் வருகிறார்கள். பஸ்கட்டணத்திற்கே கடன் வாங்கி வரும் வறிய நிலையில் இருக்கும் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது இறைவனுக்கு அளிக்கும் தொண்டாகும். கோவை அரசு ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தை செம்மை படுத்த வேண்டும். பெண்கள் வார்டு கழிவறைக்கு சென்றால் இல்லாத நோயெல்லாம் வந்து விடும் நிலையில் உள்ளது.பிணவறையில்பல நாட்களாக குளிர்சாதன பெட்டி இயங்க வில்லை. இதனால் பிணங்கள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எம்.ஆர்.ஐ.ஸ்கேன்வசதி இருந்தும் அதை இயக்க ஊழியர்கள் இல்லை.பிரசவ வார்டில் 50 படுக்கைகள் மட்டுமே உள்ளன. 100 க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். நரம்பியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி வார்டில் படுக்கைகள் மோசமான நிலையில்உள்ளன. இவற்றை எல்லாம் சீர்படுத்தக்கோரிதான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகம் விரைவில் நல்ல முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் விரிவு படுத்தப்படும்.
இவ்வாறு என்.கே.அஷ்ரப் கூறினார்.
பதிப்பு : தமுமுக.

ராஜஸ்தானில் பொதுச்செயலாளர்!



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 21.6.2008 அன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற அனைத்து முஸ்லிம் பிரதி நிதிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்திலிருந்து தமுமுகவின் பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக கீட்டின் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பதிப்பு : தமுமுக.

முஸ்லிம் பெண்களிடம் மன்னிப்புக் கேட்ட ஒபாமா


அமெரிக்க அதிபர் தேர்தலில் கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பராக் ஒபாமா முன்னணியில் நிற்கிறார். தடைகள் பல தகர்ந்து ஒரு கறுப்பின சமூகத்தைச் சேர்ந்தவர் அமெரிக்க அதிபராக வரும் வாய்ப்பு இருப்பதாக தகவல் கள் வரத் தொடங்கி யதுமே உலகெங்கும் குறிப்பாக கிழக்கு உலகத்தில் உற்சாகம் ஊற்றெடுக்க கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அரசியல் மற்றும் பலம் நிறைந்த யூத லாபியை சமாளிக்க அந்தக் கூட்டத்துக்கு ஆதரவாக அவர் பேசத் தொடங்கினார். ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலம் (மஸ்ஜிதே அக்ஸா அமைந்த பகுதி) இஸ்ரேலின் தலைநகராக மாற வேண்டும் என்ற தனது கருத்தை வெளியிட்டார்.
ஒருங்கிணைந்த ஜெருஸ்ஸலமை இஸ்ரேலின் தலைநகராக மாற்றமுடியாது என்று முடிவு கட்டியே யூதர்கள் தங்களது தலைநகரமாக டெல்அவிவை அறிவித்த திலிருந்தே பாலஸ்தீனர்கள் உயிரே போனாலும் ஜெருஸ்ஸலமை முழுமையாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று தெரிந்தே யூதர்களே ஓய்ந்திருந்த பிரச்சினையை ஒபாமா கிளப்பினார்.
ஆனால் யாரும் இதை பொருட் படுத்தவில்லை. பாவம் ஒபாமா! ஓட்டுக் காக ஏதேதோ பேசுகிறார் என்றே கருதினர். அதனால் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒபாமாவை ஆதரிக்கத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னுக்கு தனது பகிரங்க ஆதவை இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்த பிறகு மெக்கெய்னுக்கு இருந்துவந்த ஆதரவு மேலும் குறையத் தொடங்கியது. எல்லாமாகச் சேர்ந்து ஒபாமா வுக்கு வலு சேர்த்தது.
இந்நிலையில் ஹிஜாப் அணிந்த இரண்டு இஸ்லா மிய இளம் பெண் களிடம் பராக் ஒபாமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்ட தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் பிரச் சார பேரணிக்காக ஒபாமா தயாராகும் வேளையில் தொலைக்காட்சி காமெராக் கள் ஒபாமாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம் ஒபாமா எழுந்து நிற்க, பின்வரிசையில் அதிக மாகப் பெண்கள் அமரவைக்கப்பட்டிருந் தார்கள். (தாய்குலத்தின் ஆதரவைக் கவரும் முயற்சியாக இது கருதப்பட்டது) அந்நேரத்தில் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் விதமாக ஒரு காட்சி அரங்கேறியது.
அரங்கத்தில் அமர்ந்திருந்த இரண்டு முஸ்லிம் இளம் பெண்கள் வலுக்கட்டா யமாக எழுப்பப்பட்டு, அந்த இடத்தை விட்டு அகற்றப்பட்டனர். அந்த இரண்டு இளம்பெண்களும் ஹிஜாப் என்னும் தலைமுக்காடு அணிந்திருந்ததே நிகழ்ச்சி அமைப்பாளர்களின் முறையற்ற செயலுக்கு காரணமாக கூறப்பட்டது.
ஹிஜாப் அணிந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்காவில் கடும் விவாதத்தை எழுப்பியது.
ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் செய்த தவறுக்கு ஒபாமா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் எழுந்தது.
அமெரிக்க முன்னணி முஸ்லிம் அமைப்பான 'கேர்' தனது அழுத்தமான கண்டனத்தை பதிவு செய்தது. அமெரிக்கா வாழ் முஸ்லிம்களின் தொடரும் அதிருப்தியினால் ஒபாமா பதீல் மற்றும் ஹெபா ஆரிஃபா என்ற இரண்டு முஸ்லிம் சகோதரிகளிடமும் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஒபாமா வெல்லும் கலையை கற்றுக் கொண்டு விட்டார்.
பதிப்பு தமுமுக .