Sunday, June 29, 2008

அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம் - இன்றும் அதிர்ந்தது

டெல்லி: அந்தமானில் இன்று அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களாகஅடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 5 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று காலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. காலை 6.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ் .